திருச்சி, ஜூன் 4 –
திருச்சி கே.கே. நகரில் தனியார் வணிக வளாகத்தில் பல்பொருள் அங்காடி நடத்தி வரும் மலர்க்கொடி (53) என்பவரின் கடைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்ம நபர்கள், பொருட்கள் விலை விசாரிப்பது போல் நடித்து, முட்டையை அவர் முகத்தில் வீசிவிட்டு, அவரிடமிருந்த சுமார் 13 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து கே.கே. நகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


