நல்லூர், பிப். 21 –
பா.ஜ.க கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார், நாகர்கோவில் மேற்கு மாநகர தலைவர் சதீஷ் மற்றும் நாகர்கோவில் மேற்கு மாநகர் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு அமைப்பாளர் செர்ஜின் ஆகியோரின் ஒப்புதலுடன் நாகர்கோவில் மேற்கு மாநகர பாரதிய ஜனதா கட்சி விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
அதன்படி துணைத் தலைவராக விநாயகம், செயலாளர்களாக கார்த்திக், அனீஸ், அபின், சுஜின், மனோஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். கட்சியின் அனைத்து பொறுப்பாளர்களும், தொண்டர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று நாகர்கோவில் மேற்கு மாநகர பா.ஜ.க விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.



