குளச்சல், மே 2 –
குளச்சல் அருகே ஆலஞ்சி பகுதியை சேர்ந்தவர் சிம்சன் (60). கொத்தனார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த ஏழு வருடங்களுக்கு முன் மன நலம் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு வீட்டின் அருகில் உள்ள அவரது உறவினர்கள் உணவு அளித்து வருவது வழக்கம். இன்று காலை உணவை கொடுத்துவிட்டு சென்றனர். பின்னர் மதிய உணவு கொண்டு செல்லும்போது வீட்டில் சின்சன் இல்லாததால் வீட்டின் பின்னால் சென்று பார்த்தனர்.
அப்போது அங்குள்ள மரத்தில் நைலான் கயிற்றால் சிம்சன் தூக்கிட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடனே இது குறித்து சிம்சன் சகோதரி கிரேசி என்பவருக்கு தகவல் தெரிவித்தனர். கிரேசி குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சிம்சனை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடல் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டு, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


