தருமபுரி, ஜூன் 01 –
தருமபுரி மாவட்ட ஐக்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்ட குழு சார்பில் விவசாயிகளை பாதிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ரசாயன உர விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தருமபுரி மாவட்ட செயலாளர் ஜெ.பிரதாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்திய விவசாயிகள் ரசாயன உரம் இன்றி அதிக மகசூல் பெற முடியாத நிலையில் உர விலையை மத்திய அரசு கடுமையாக உயர்த்தியுள்ளதால் பெரும் பாதிப்படையும் விவசாயத்துறை. ஏற்கனவே பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு விலை உயர்வு இதனை தாங்கி கொள்ளதா நிலையில் இருந்து வரும் நிலையில் உர விலை உயர்வு, அனைத்து பயிர்களுக்கும் அடி உரமாக பயன்படுத்தும் காம்ப்ளக்ஸ் 40 கிலோ மூட்டை ரூ. 660 விலை உயர்வு, பூட்டான் ரூ 400 விலை உயர்வு, பாக்டம்பாஸ் ரூ400 விலை உயர்வு, அமோனியா சல்பேட், சூப்பர் பாஸ்பேட்க்கு தலா ரூ 200 விலை உயர்வு என்பது விவசாயம் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படும். ஆகவே ஒன்றிய பாஜக அரசு இந்த விலை உயர்வை கைவிட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


