நாகர்கோவில், ஏப்ரல் 9 –
நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆஸ்டினுக்கு, அகில இந்திய தமிழர் கழகம் முழு ஆதரவு அளித்துள்ளது. அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் அதன் நிறுவனர் முத்துக்குமார், திமுக வேட்பாளர் ஆஸ்டினுக்கு சால்வை அணிவித்து தனது முழு ஆதரவினை தெரிவித்தார்.
இது குறித்து அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் கூறுகையில்: நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் ஆஸ்டின் ஏற்கனவே எம்எல்ஏ யாக இருந்தவர் தான். அனைத்து தரப்பு மக்களிடமும் திமுக வேட்பாளர் ஆஸ்டினுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
தற்போது நாகர்கோவில் மாநகரத்தில் ஆஸ்டின் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதுவும் சிறுபான்மையினரின் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நிச்சயம் திமுக வேட்பாளர் ஆஸ்டின் நாகர்கோவில் தொகுதியில் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.



