விளாத்திகுளம், ஜூலை 10 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வசந்தம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா திருக்கோவிலில் வாரம் வாரம் வியாழக்கிழமை தோறும் சாய் பாபாவிற்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும். இதில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு முன்னதாக ஸ்ரீ சீரடி சாய் பாபா அவர்களுடைய முழு உருவ சிலைக்கு வண்ண மலர்கள் சாற்றப்பட்டு பஜனை பாடல்கள் பாடப்பட்டு குத்து விளக்கு ஏற்றி பூ, பழம் உள்ளிட்டவற்றைக் கொண்டு பூஜைகள் செய்து தீபாரதனை காட்டி சாய்பாபாவை மனம் உருகி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்வை முன்னிட்டு பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் நன்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்து. இதை தொடர்ந்து நடைபெற்ற கூட்டுப் பிரார்த்தனையில் பாபாவின் பாடல்களை பாடியவாறு கோவிலில் நடைபெற்ற ஆர்த்தியை கண்குளிர கண்டு தரிசித்தனர். பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் பாபாவின் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு உணவு அருந்தி சாய்பாபாவின் அருள் பெற்றுச் சென்றனர்.



