கிருஷ்ணகிரி, ஜுன் 29 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக விவசாய சங்கத்தின் ஜூலை 5ஆம் தேதி நடைபெற உள்ள பேரணி மற்றும் பொதுக்கூட்டம் தொடர்பான அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்டஇளைஞர் அணி துணைச் செயலாளர் ராஜ தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் அனுமந்தராசு வரவேற்புரை ஆற்றினார்.
மேலும் இக்கூட்டத்தில் தமிழக விவசாய சங்கத்தினை சார்ந்த ராஜீவ் காந்தி, மாசிலாமணி, ராதாகிருஷ்ணன், சுயம்பு, சுப்பிரமணியன், கோவிந்தராஜ், அண்ணாதுரை, வடிவேல், பெருமாள், கிருஷ்ணமூர்த்தி, பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக தமிழக விவசாய சங்கத்தின் மாநில தலைவர் ராம கவுண்டர் கலந்து கொண்டு கூட்டத்தில் நிறைவேற்றுள்ள தீர்மானங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய இரமிகவுண்டர் தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கைகள் பால் நிலையை உயர்த்தி தருவதாக குறிப்பிட்டார். ஆனால் வரை பாலுக்கான விலையை உயத்தப்படவில்லை. ஆனால் தனியார் பாலின் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. கறவை மாடுகளின் விலையும் உயர்ந்த நிலையில் ஆவின் பாலுக்கான விலையும் உயரவே இல்லை இதே நிலை நீடித்தால் ஆவினுக்கு பால் ஊற்றுவதை நிறுத்தி விட்டு தனியாருக்கு பால் ஊற்றும் நிலை ஏற்படும் ஆகையால் தமிழக அரசு உடனடியாக லிட்டர் பாலுக்கு ரூ.10 உயர்ந்தி வழங்க முன்வர வேண்டும்.
ஏலகிரி மலையில் இருந்து வரும் தண்ணீரை பெரியதள்ளபாடி என்ற இடத்தில் தடுப்பணை கட்டி நிலத்தடி தண்ணீரை பெருக்க வேண்டும். தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் பிரிட்டிஷ் காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தை செயல்படுத்த கடந்த 10 ஆண்டுகள் முன்பு சர்வே செய்யப்பட்டு அதற்காக ரூ.9,500 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை அந்த பணிகள் தொடங்கப்படவில்லை. ஆகையால் இந்த திட்டத்தை மத்திய மாநில அரசுகள் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தேர்தல் அறிக்கையின்டி பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் வருகின்ற ஜூலை 5ம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெறும் உழவர் தின பேரணியில் விவசாயிகள் பெருந்துறை கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.



