சுசீந்திரம், ஜீன் 1 –
சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனிஷ் லியோன் நேற்று சொத்தவிளை கடற்கரை பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ளும்போது சந்தேகப்படும்படியாக பையோடு திரிந்த மூன்று வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் ராஜாக்கமங்கலம் துறை சுனாமி காலணியை சார்ந்த கிராஸ் சாரதி (18) என்பவரும் தெற்கு சூரங்குடி வடலி காட்டு விளையைச் சார்ந்த நந்தகுமார் (20) என்பதும் தூத்துக்குடியைச் சார்ந்த தமிழரசு (19) என்பதும் இவர்கள் அதிக பண ஆசையில் கஞ்சா என்னும் போதை பொருளை பள்ளி மாணவர்களுக்கும் கூலி தொழிலாளர்களுக்கும் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தனர்.
இதில் கிராஸ் சாரதி 1.100 கிலோ கிராம் கஞ்சாவும் நந்தகுமார் 50 கிராம் கஞ்சாவும் தமிழரசு 50 கிராம் கஞ்சாவும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்து அவர்களை சுசிந்திரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.


