திருப்பத்தூர்:மே:12,
திருப்பத்தூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் போராம்பட்டு அருகே கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட அருள்மிகு ஶ்ரீ சென்ன கேசவ பெருமாள் கோயிலானது இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. பல நூற்றாண்டுகளை கடந்த இந்த திருக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் நடந்தும், வாகனங்களிலும் வந்து செல்கின்றனர். அடிவாரத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு மலை மீது செல்ல வேண்டும். கடந்த ஆட்சியில் 2015- 2016 ஆண்டில் IGF திட்டத்தின் கீழ் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலையும் தடுப்பு சுவரும் அமைத்து பணி முடிக்கப்பட்டது. தற்போது இந்த சாலையானது தேர்தல் விதிமுறையின் காரணமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்த திருக்கோயிலுக்கு முக்கிய பௌர்ணமி, அமாவாசை, சனிக்கிழமை நாட்களிலும் குறிப்பாக அதிகமான திருமணங்கள் இங்கு நடைபெறுவது உண்டு. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். பெரும்பான்மையான பக்தர்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கோயில் இப்படி உள்ளதே என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். விரைவாக தார் சாலையும் தடுப்பு சுவரும் சீராக அமௌத்து தர வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. சம்மந்தப்பட்ட அலுவலர்கள் இதன் மீது நடவடிக்கை மேற்கொள்வார்களா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
கோவிலுக்கு செல்லும் தார் சாலையை சீரமைக்க பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை



