நாகர்கோவில், மே 28 –
தோவாளை அருகே வீரவநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் (42). கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தை தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மாயமாகி இருந்தது.
நள்ளிரவு முதல் அதிகாலை வரையிலான இடைப்பட்ட நேரத்தில் மர்ம நபர்கள் யாரோ வாகனத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து சௌந்தர்ராஜன் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.


