சுசீந்திரம், மே 22 –
சுசீந்திரம் அருகே உள்ள தெங்கம்புதூர் பகுதியில் சுசீந்திரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் ரோந்து பணி மேற்கொள்ளும் போது சந்தேகப்படும்படியாக ஒரு நபர் சுற்றி திரிந்துள்ளார். அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் தெங்கம்புதூர் பகுதியில் உள்ள காந்தி நகர் பகுதியைச் சார்ந்த ஷேக் முகமது சமில் (19) என்பதும் அவர் யாரோ அடையாளம் தெரியாத ஒருவரிடம் 40 கிராம் கஞ்சாவை வாங்கி மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதன்பேரில் அவரை கைது செய்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


