சென்னை, டிச. 09 –
இந்தியாவின் முன்னணி சம்பளம் சார்ந்த நிதிச் சேவைகள் தளமான ‘சேலரிசீ’ (SalarySe), சிட்டி யூனியன் வங்கியுடன் இணைந்து, ‘லெவல் அப் கிரெடிட் கார்டை’ அறிமுகப்படுத்தியுள்ளது. மாதச் சம்பளம் வாங்குவோருக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்தியாவின் முதல் கிரெடிட் கார்டு இதுவாகும். இது ”கிரெடிட் ஆன் யூபி ஐ ” தொழில்நுட்பத்தில் இயங்குகிறது என்பது இதன் சிறப்பம்சமாகும்.
அன்றாட யுபிஐ (UPI) பரிவர்த்தனைகள், ஆன்லைன் ஷாப்பிங், மாதக் கட்டணங்கள் மற்றும் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு இது மிகவும் உதவியாக இருக்கும். இந்த ‘லெவல் அப் கிரெடிட் கார்டின்’ மிக முக்கிய அம்சம், ‘சம்பள நாள் போனஸ்’ ஆகும். மாதச் சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் நாட்களில், இந்த கார்டு மூலம் செய்யப்படும் செலவுகளுக்கு 37.5 சதவீதம் வரை ரிவார்டு புள்ளிகள் வழங்கப்படும்.
இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை துறையை வலுப்படுத்தும் வகையில் பணியாளர்களுக்கு யு.பி.ஐ. வாயிலாக கடன் கொடுக்கும் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. ருபே (RuPay) நெட்வொர்க் மற்றும் என்பிசிஐ (NPCI) கட்டமைப்பின் கீழ் இது செயல்படுவதால், வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான கடன் வசதி உறுதி செய்யப்படுகிறது .
இது குறித்து ‘சேலரிசீ நிறுவனத்தின் இணை நிறுவனர் மோகித் கோரிசரியா கூறியதாவது, “இந்தியாவில் மாதச் சம்பளம் பெறும் கோடிக்கணக்கான மக்களின் நிதி நிலையை உயர்த்துவதே எங்கள் சேலரிசீயின் நோக்கமாகும் அவர்களுக்குத் தேவையான நியாயமான கடன் சலுகைகளை இந்த லெவல் அப் கார்டு வழங்கும். கிரெடிட் ஆன் யு.பி.ஐ. உடன் இணைந்திருப்பதால், அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதற்கான ரிவார்டு புள்ளிகளும் விமான நிலைய லவுஞ்ச் (Lounge) வசதி, குறைவான அந்நியச் செலாவணி கட்டணம் போன்ற பிரீமியம் வசதிகளும் இதில் உள்ளன. இது அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தும். சிட்டி யூனியன் வங்கியோடு ஒருங்கிணைந்து, இந்தியா முழுக்க, பொறுப்புள்ள டிஜிட்டல் கடன் வழங்கும் வாய்ப்பை உருவாக்குவதில் பெருமை கொள்கிறோம் என்றார்.
சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் விஜய் ஆனந்த் பேசும்போது, “இந்தியப் பொருளாதாரத்தின் நுகர்வுத் திறனில் மாத சம்பளதாரர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர் . அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நவீன கடன் வசதியை அளிக்க ‘சேலரிசீயுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறோம் . இதன் மூலம் டிஜிட்டல் வழிமுறையைப் பயன்படுத்தி கடன்களை வழங்கவேண்டும் என்ற எங்கள் நோக்கமும் நிறைவேறுகிறது. மேலும், யாருமே இத்தகைய வாய்ப்பை வழங்காத நிலையில், நாங்கள் முதன்முதலாக இதைச் செய்கிறோம் மேலும் ‘சேலரிசீ’யுடன் இணைந்து பல புதிய சேவைகளையும் வழங்குவோம்” என்றார்.



