கோவை, மே 16 –
திமுகவில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட்ட மக்கள் சேவகர் டி.ஆர்.சண்முகசுந்தரம் தவெகவில் இணைந்தார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் மக்கள் சேவகர் டி.ஆர்.சண்முகசுந்தரம். இவர் தி.மு.க மாநில செயற்குழு உறுப்பினராக இருந்தார். சட்டசபை தேர்தலில் திமுகவின் மேட்டுப்பாளையம் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டார். 26,756 ஓட்டுகள் பெற்று மேட்டுப்பாளயத்தில் திமுக வேட்பாளர் கவிதா கல்யாணசுந்தரம் தோல்வியடைவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் மக்கள் சேவகர் சண்முகசுந்தரம் தவெகவில் இணைந்தார். சண்முகசுந்தரம் கூறுகையில், மேட்டுப்பாளையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு நான்தான் காரணம்.
வெற்றி பெற்ற இடத்தில் இருப்பதுதான் சரி என்று தவெகவில் இணைந்துவிட்டேன். முதல்வர் விஜய் மக்களுக்கு நல்லாட்சி கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால் தவெகவில் மக்கள் பணியை தொடரவுள்ளேன் என்றார்.



