மார்த்தாண்டம், மே 7 –
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் லைசா (60). இவரது மகன் ஜெகதீஷ் (35) கூலி தொழிலாளி. இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த மெல்பின் ஜோஸ், சுஜின் மார்ஷல் மற்றும் சிபு என்கிற 3 பேருக்கும் இடையே சொத்து சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவ தினம் லைசா வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மெல்பின், மார்ஷல் மற்றும் சிபு ஆகி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து லைசாவை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதை தட்டிக் கேட்க வந்த ஜெகதீசையும் கீழக்கிடந்த கல்லை எடுத்து சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து 3 பேரும் தப்பி சென்று உள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த லைசா, ஜெகதீஷ் ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் சம்பந்தப்பட்ட மெல்வின் ஜோஸ், சுஜின் மார்ஷல் மற்றும் சிபு ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


