திருச்சி, மே 6 –
முசிறி புதுத்தெருவைச் சேர்ந்த மகேஸ்வர தயால் (19) மற்றும் சிந்தாமணி தெருவைச் சேர்ந்த அருள் முத்துக்குமரன் (20) ஆகிய இருவரும் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் இருசக்கர வாகனத்தில் முசிறி SB மெட்ரிகுலேஷன் பள்ளி அருகே சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



