திருச்சி, ஏப். 30 –
புதுக்கோட்டை மாவட்டம் தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரேம், மணப்பாறை கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த குப்பை ஏற்றி வந்த டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வையம்பட்டி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



