போகலூர், செப். 12 –
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியம் கல்லூர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ( மகளிர் திட்டம்) சார்பில் நடத்தப்படும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் பல்வேறு வகையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களில் உள்ள மகளிர் குழுக்களுக்கு தமிழ்நாடு அரசின் மூலம் பல்வேறு வகையான வங்கி கடன் உதவிகள் வழங்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது தவிர மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 8527 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. திருவாடனை வட்டாரத்தில் 780 சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. திருவாடனை ஊராட்சி ஒன்றியம் கல்லூரி ஊராட்சியில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு செயல்பட்டு வருகின்றது. இக்கூட்டமைப்பின் மூலம் பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாவட்ட அளவில் 2025-26 ஆண்டிற்கு ரூபாய் 18 கோடி கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கல்லூர் ஊராட்சியில் 20 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ரூபாய் 2.40 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் கல் ஒரு ஊராட்சியில் 25 மகளிர் சுய உதவி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களின் மூலம் மண்பாண்டம் பொருட்கள் செய்தல், சணல் பைகள் தைத்தல், பனை ஓலை கூடை பின்னுதல், பத்தி, கூடம், சாம்பிராணி தயாரித்தல், வயர் கூடை பின்னுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பொருட்கள் மாவட்ட அளவில் கல்லூரி சந்தை புத்தகத் திருவிழா கண்காட்சி மாநில அளவிலான கண்காட்சி மற்றும் இணையவழி சந்தைப்படுத்துதல் ஆகியவை மூலம் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இக்கூட்டமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடர்பாகவும் சுழல்நீதி சமுதாய முதலீட்டு நிதி வங்கிக் கடன் இணைப்பு ஊராட்சி அலுவலக கூட்டமைப்பு பதிவேடுகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன் மகளிர் குழுவின் செயல்பாடுகள் குறித்து குழு உறுப்பினர்களிடம் கேட்டு அறிந்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பெண்கள் வாழ்வில் ஏற்றம் காணும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மகளிர் குழுக்களுக்கு பல்வேறு வங்கி கடன் உதவிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகின்றார். எனவே மகளிர் குழுக்கள் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது தமிழ்நாடு ஊரக மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குனர் பாபு, உதவி திட்ட அலுவலர்கள் சித்ரா தேவி, ராஜா முகமது, மேலாளர் தங்கபாண்டியன், திருவாடானை வட்டார இயக்க மேலாளர் ராஜகோபால், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.



