சென்னை, மார்ச் 19 –
சென்னையில் உள்ள நெக்ஸஸ் விஜயா மால், வாடிக்கையாளர்களுக்காக சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு பண்டிகைக்கால அனுபவத்துடன் ரமலான் மாதத்தை கொண்டாடுகிறது. ரமலான் மாதத்தை மையமாகக் கொண்ட அலங்காரத்துடன் வடிவமைக்கப்பட்டு மார்ச் 21, 22 ஆகிய தேதிகளில் மாலை 3 மணி முதல் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளரின் தலைமையில் இந்த வணிக வளாகம் நடத்தவுள்ளது.
இது வாடிக்கையாளர்களின் ஷாப்பிங் அனுபவத்திற்கு புத்துணர்ச்சியையும் உற்சாகத்தையும் சேர்க்கும். பார்வையாளர்கள் கொண்டாட்டங்களில் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையில், இந்த அமர்வுகள் கலகலப்பான சூழலுடனும், குடும்பத்தினர் அனைவரும் ரசிக்கக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் அனைவருக்கும் அனுமதி இலவசம்.
இதில் வாடிக்கையாளர்கள் ஸ்பின் தி வீல் ‘ ரமலான் கருப்பொருள் சார்ந்த விரைவு வினாடி வினா மற்றும் ‘சொற்களை வரிசைப்படுத்தும்’ சவால் போன்ற சுவாரஸ்யமான விளையாட்டுகளில் பங்கேற்கலாம். ஒவ்வொரு செயல்பாடும் சிறிய பரிசுகளை வழங்குவதோடு, உற்சாகமான சூழலையும் தக்கவைக்கிறது.
இந்தக் கொண்டாட்டங்களின் வாயிலாக, நெக்ஸஸ் விஜயா மால் மக்களை ஒன்றிணைத்து
பொருட்களை வாங்கி, ரமலானின் மகிழ்ச்சியை எளிய அதே சமயம் ஈர்க்கக்கூடிய வகையில்
பண்டிகைக் காலச் சூழலை உருவாக்க இலக்கு கொண்டுள்ளது.



