திருச்சி, மே 20 –
திருச்சி ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலூர் காவிரி ஆற்றங்கரையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் சுதா அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



