சென்னை, ஏப்ரல் 25 –
குழந்தைகளின் வளர்ச்சிசார் தேவைகளை முன்னிறுத்தும் வகையில், ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை, தனது சோளிங்கநல்லூர் கிளையில் ‘ஹாப்பி வைப்ஸ்’ எனும் ஒருங்கிணைந்த கொண்டாட்டத்தை நடத்தியது. இந்த நிகழ்வில் வளர்ச்சிசார் குழந்தை மருத்துவ நிபுணர்கள் டாக்டர் பெருமாள் சத்யா எஸ், டாக்டர் அகிலா சிவகுமார் மற்றும் பல நிபுணர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவில், குழந்தைகளில் சுமார் 5–10% பேருக்கு வளர்ச்சிசார் வேறுபாடுகள் காணப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனை தனது அனைத்து மையங்களிலும் முழுமையான வளர்ச்சிசார் குழந்தை மையத்தை நிறுவியுள்ளது. இவ்வாண்டின் “ஹாப்பி வைப்ஸ்” என்ற கருப்பொருள், தனித்துவம், தன்னம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியை கொண்டாடுவதை மையமாகக் கொண்டது.
இந்த நிகழ்வில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். குழந்தைகள் ஃபேன்சி டிரஸ், நடனம், பாடல் மற்றும் திருக்குறள், பாராயணம் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தங்களின் திறமைகள் மற்றும் தன்னம்பிக்கை வெளிப்படுத்தினர்.
மேலும் சுய பாதுகாப்பு செயல்பாடு மற்றும் உடற்பயிற்சி (SCAF) அகாடமியின் பயிற்சியாளர்கள் குழந்தைகளுக்கு முறையான உடற்பயிற்சிகளை வழங்கினர். வளர்ச்சித் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு தனித்துவமான உடற்பயிற்சி எவ்வளவு அவசியம் என்பதை அவர்கள் வலியுறுத்தினர்.
ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின், வளர்ச்சிசார் குழந்தை மைய மருத்துவ நிபுணர் டாக்டர் பெருமாள் சத்யா எஸ் வளர்ச்சிசார் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த சூழலை உருவாக்குவதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும்
குழந்தைகளும் பெற்றோர்களும் ஒன்றாக சேரும் ஒரு தளத்தை உருவாக்குவது உணர்ச்சி வசப்படுத்தும் அனுபவமாகும். இது ஒவ்வொரு குழந்தையின் தனித்திறனை கண்டறிந்து வளர்க்க உதவுகிறது” என்றார்.
மருத்துவமனையின் சோளிங்கநல்லூர் கிளை இயக்குநர் ஜான்பால் விஜய் கூறுகையில், “இங்கு மருத்துவ சேவைகளை தாண்டி, குழந்தைகளையும் குடும்பங்களையும் வலுப்படுத்தும் அர்த்தமுள்ள அனுபவங்களை உருவாக்குவது எங்களின் உறுதிப்பாடாகும். ஹாப்பி வைப்ஸ்’ நிகழ்வு, ஒவ்வொரு குழந்தையும் மதிப்புடன், ஊக்கத்துடன், கொண்டாடப்படும் ஒருங்கிணைந்த சூழலை உருவாக்கும் எங்கள் தொடர்ந்த முயற்சியை பிரதிபலிக்கிறது” என்றார்.



