தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம பணியாளர் சங்கத்தின் மாநில மையம் சார்பில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி மற்றும் கூடுதல் ஆணையர் நடராஜன் ஆகியோரை சென்னை தலைமை அலுவலகத்தில் மாநில ஆலோசகர் சிவக்குமார் மாநில செயற்குழு உறுப்பினர் கரும்பாயிரம் ஆகியோர் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கலந்து கொண்டு காலம் வரை ஊதியம், கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு மற்றும் இன்றி வருவாய் துறை சம்பந்தமான அனைத்து பணிகளையும் தெரிந்துள்ளவர்களுக்கு இளநிலை உதவியாளர் பதிவு எழுத்தாளர் ஈர்ப்பு ஓட்டுநர் உள்ளிட்ட பதிவுகள் வழங்க வேண்டும் ஆகிய 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேரில் சென்று சால்வை நினைவுப் பரிசு வழங்கி மனு அளித்து பேசினர். இந்த நிகழ்வில் மாநில இணை ஒருங்கிணைப்பாளர்கள் சுதர்சன் ரூபலிங்கம் நாகப்பட்டினம் மாவட்ட துணைத் தலைவர் லட்சுமி மயிலாடுதுறை மாவட்ட தலைவர் நல்லமுகமது உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



