தஞ்சாவூர், ஏப்ரல் 22 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகளில் 4000 போலீசார் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 84 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாகும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தஞ்சாவூர் சட்டசபை தொகுதியில் 309 வாக்குச்சாவடிகளுக்கு 360 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், திருவையாறு சட்டசபை தொகுதியில் 338 வாக்கு சாவடிகளுக்கு 405 மின்னணுவாக்குப்பதிவு எந்திரங்களும், ஒரத்தநாடு தொகுதியில் 314 வாக்கு சாவடிகளுக்கு 376 மின்னணு எந்திரங்களும், பட்டுக்கோட்டை தொகுதியில் 310 வாக்கு சாவடிகளுக்கு 372 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும், பேராவூரணி தொகுதிக்கு 284 வாக்குச்சாவடிக்கு 340 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் அனுப்பிடவும்
அதே போல் கும்பகோணம் தொகுதியில் 300 வாக்குச் சாவடிகளுக்கு 360 மின்னணுவாக்கு பதிவு எந்திரங்களும், திருவிடைமருதூர் தொகுதியில் 326 வாக்குச் சாவடிகளுக்கு 391 மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களும் பாபநாசம் தொகுதியில் 315 வாக்குச்சாவடிகளுக்கு 378 வாக்குப் பதிவு எந்திரங்களும் அனுப்பி வைக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் 8 தொகுதிகளில் 2496 வாக்குசாவடி மையங்களில் 2982 மின்னணு வாக்கு பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படவும், 3242 ஒப்புகை சீட்டை காட்டும் எந்திரங்களும் பயன்படுத்தப்படவும் உள்ளது. மாவட்டம் முழுவதும் 84 வாக்கு சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் போலீஸாரும் 500 மத்திய துணை ராணுவத்தினரும் 12 ஆயிரத்து 281 தேர்தல் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து செல்ல கூடிய வேன்கள் தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த வேன்களில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட்டன. இவற்றை மாவட்ட கலெக்டா பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் 8 தொகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடக்கூடிய போலீஸார், ஓய்வு பெற்ற போலீஸார், முன்னாள் ராணுவ வீரர்கள் என ஏராளமானோர் தஞ்சாவூர் ஆயுதபடை மைதானத்திற்கு வந்திருந்தனர். இவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பார்வையிட்டார்.



