புதுக்கடை, ஏப்.9-
புதுக்கடை அடுத்த பனங்கால்முக்கு என்ற இடத்தை சேர்ந்தவர் மேரி பெல்சி (33). மீனவர். வியாபாரம் செய்து வருகிறார். இவரது கணவர் மரிய பிரபாகரன் (35) முளகுமூடு கிராம அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது வீட்டு அருகில் வசிப்பவர் ஆண்டனி (53). இவர் கடல் தொழில் செய்து வருகிறார். மரிய பிரபாகரன் காரை சேதப்படுத்தியது சம்பந்தமாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவ தினம் மேரி பெல்சி மற்றும் அவரது கணவர மரிய பிரபாகரன் ஆகியோர் அந்த வழியாக வீட்டிற்கு நடந்து செல்லும் போது, ஆண்டனி இவர்களை பார்த்து கெட்ட வார்த்தைகள் பேசி தகராறு செய்துள்ளார்.
தொடர்ந்து ஆண்டனி மற்றும் சுபாஷ் (27), ஜியோ (20) ஆகியோர் சேர்ந்து கணவன் மனைவியை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் காயம் அடைந்த மேரி பெல்சி, மரிய பிரபாகரன் ஆகிய இருவரும் பள்ளியாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


