நாகர்கோவில், மார்ச் 6 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ராஜாஸ் இன்டர்நேஷனல் தனியார் பள்ளியில் மழலையர் பிரிவு குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. சின்னஞ்சிறு குழந்தைகளின் கல்விப் பயணத்தின் தொடக்கம் மிக சிறப்பாக அமைய வேண்டும் என்ற நோக்கில் சிறந்த கல்வி தரத்துடன் சின்னஞ்சிறு குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக சமுதாய சிந்தனை, பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரையும் மதித்தல் போன்ற சமுக கல்வியையும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கற்று தேர்ச்சி பெற்று முதல் வகுப்பிற்கு முன்னேறி செல்லும் நிகழ்வு கலை நிகழ்ச்சிகளுடன் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் பெற்றோர் முன்னிலையில் மாணவ மழலை செல்வங்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில் யூகேஜி முடிக்கும் குழந்தைகளுக்கு, கல்லூரி பட்டமளிப்பு விழாவைப் போன்ற தொப்பி மற்றும் 2026 எண்கள் பொறிக்கப்பட்ட பேல்ஜ் சால்வை அணிந்து பட்டங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்த பட்டங்கள் மற்றும் சான்றிதழ்களை பள்ளியின் தாளாளர் மலர் விழி மற்றும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர்.முகமது யாசர், டாக்டர்.ரேஷ்மி ஆகியோர் மழலைகளுக்கு வழங்கினர்.
மேலும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், நடனம் மற்றும் தங்கள் கனவுகளை பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் கூறும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினர். குழந்தைகளின் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் பட்டம் பெற்ற பின்பு புகைப்படம் எடுத்து ஆனந்தம் அடைந்தனர்.



