தேனி, ஜனவரி 23 –
தேனி மாவட்டம் தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்கள் சந்தித்து பேசியபோது கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பி கேள்விக்கு, “சென்னையில் இரண்டு நாட்களில் கழக நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் உள்ளது. அந்த கூட்டம் முடிந்த பிறகு உரிய பதில் தெரிவிக்கப்படும்”
பிரதமர் மோடி தலைமையிலான என்.டி.ஏ பொதுக்கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, ‘தெரிந்து கொண்டே கேள்வி கேட்கிறீர்கள்” என்று பதில் அளித்தார்.
தை பிறந்தால் வழி பிறக்கும் எனக் கூறினீர்களே அது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, “தை முடிவதற்குள் உரிய பதில் அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.



