புதுக்கடை, நவ. 15 –
புதுக்கடை அருகே காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் மகன் ஆகாஷ் (17). இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பின்னால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை 9:30 மணி அளவில் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லை.
உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுவன் தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தாயார் செல்வராணி என்பவர் புதுக்கடை போலீசில் மகனை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சிறுவன் குறித்து விசாரித்து வருகின்றனர்.


