நாகர்கோவில், அக். 4 –
தூத்துக்குடியில் கடல் மாநாடு, தஞ்சையில் தண்ணீர் மாநாடு நடத்தப்போவதாக சீமான் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அமலி நகர் மீனவ கிராமத்திற்கு சீமான் இன்று சென்றிருந்தார். அங்கு மீனவர்களுடன் கலந்துரையாடிய அவர் கடல் மாநாடு நடத்த மீனவர்களோடு கடலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தூண்டிலில் மீன் பிடித்தார். நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் உட்பட தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் பலர் இந்நிகழ்வின்போது உடன் இருந்தனர்.



