புதுக்கடை, மார்ச் 31 –
புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமாரி (67). இவர் அந்த பகுதியில் அரசின் அனுமதி இன்றி மது பானங்கள் விற்பனை செய்வதாக புதுக்கடை போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ் அந்த பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது வசந்தகுமரியின் வீட்டு அருகே மறைத்து வைத்திருந்த அரசு மதுபானங்கள் 180 மில்லி கொள்ளளவு கொண்ட 26 மது பாட்டில்களை போலீசார் கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


