மதுரை பிப்ரவரி 3,
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 5,358 இளைஞர்கள் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் நான் முதல்வன் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். மதுரை மாவட்டத்தில் நான் முதல்வன் எனும் இத்திட்டமானது இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் 9 பொறியியல் கல்லூரிகள், 30 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 13 பாலிடெக்னிக் கல்லூரிகள், 9 தொழிற்பயிற்சி நிலையங்கள் என மொத்தம் 61 கல்வி நிலையங்களில் மாணவ, மாணவியர்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் இளைஞர்கள் வளர்ந்துவரும் தொழில் நுட்பத்திற்கேற்ப தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையில் இலவச திறன் பயிற்சிகள், குறைவான கட்டணத்துடன் கூடிய திறன் பயிற்சிகள், பாடத்திட்டத்துடன் கூடிய திறன் பயிற்சிகள் மற்றும் பாடத்திட்டத்துடன் இணைக்கப்படவுள்ள திறனெய்தும் தொழில்நுட்ப பாடங்கள். போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள், ஆங்கிலம், ஜப்பானிய ஜெர்மன் மொழித் திறன் பயிற்சிகள், ஆளுமைத்திறன் பயிற்சிகள், உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வு பயிற்சிகள் என பல்வேறு விதமான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்கள் நவீன தொழில் நுட்பங்களில் விருப்பத்திற்கேற்ற வேலைவாய்ப்பினை பெறும் வகையிலான குறுகிய கால பயிற்சிகளை தெரிவு செய்து உலகத்தரத்திலான பயிற்சிகளையும் அதற்குரிய சான்றிதழ்களையும் பெறலாம். அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் ‘நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த 2022 – 2023 ஆம் ஆண்டு முதல் இதுவரை 20,271 பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள், 45,966 கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள். 9.673 பாலிடெக்னிக், தொழிற்பயிற்சிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் என மொத்தம் 75,910 இளைஞர்கள் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். குறிப்பாக இதில் வேலைவாய்ப்பிற்காக தனித்திறன், நேர்முகத் தேர்வு பயிற்சி போன்ற சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு 5,358 இளைஞர்கள் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளனர். அந்த வகையில், நான் முதல்வன் திட்டம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வாய்ப்புகளை வழங் குவதோடு, திறமையான மாணவர்களை முன்னணி நிறு வன ங்களு டன் இணைக்கும் முக்கிய முயற்சியாக அமைகிறது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயனடைந்த கல்லூரி மாணவர் செல்வன் ஏ.கார்மெல் கிறிஸ்டோபர் தெரிவித்ததாவது:
எனது பெயர் ஏ.கார்மெல் கிறிஸ்டோபர், நான் மதுரையில் உள்ள வைகை பொறியியல் கல்லூரியில் மின்சாரம் மற்றும் மின்னணு பொறியியல் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதை அறிந்தேன். இத்திட்டத்தின் கீழ் கணினி தொடர்பான பயிற்சிளைப் பெற விண்ணப்பித்தேன். அதன்படி, 2 மாத காலம் ஆட்டோ கேட், போட்டோஷாப், கோரல் டிரா, டேலி, எம் எஸ் ஆபீஸ் உள்ளிட்ட கணினி செயல்பாடுகளை உள்ளடக்கிய பயிற்சிகளும், ஆளுமைத் திறன் மேம்பாடு. கம்யூனிகேசன் பயிற்சிகள் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன. அடுத்தடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம். எப்படி படிக்கலாம் என்றும் நேர்முகத் தேர்வுக்கு தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட்டது. எவ்வித பயிற்சிக் கட்டணமும் இல்லாமல் எனக்குத் தேவையான அனைத்து பயிற்சிகளையும் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் வழங்கினர். எண்ணைப் போன்றவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு மென்மேலும் ஊக்குவிக்கும் வகையிலான இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தொகுப்பு
இ.சாலி தளபதி எம்.ஏ.
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், மதுரை மாவட்டம்
ம.கயிலைச் செல்வம், பி.இ.
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி),