மதுரை, அக்டோபர் 27 –
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் மேடைப்பேச்சு, ஆளுமை திறன் மேம்பாட்டு பயிற்சி பன்னாட்டு பயிலரங்கம் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் பர்வீன் சுல்தானா வரவேற்புரையாற்றினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையேற்று தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் முன்னிலை வகித்தார். சொற்பொழிவாளர் சுகி.சிவம் விழாப் பேருரை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மதுரையில் இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்து இளம் மாணவர்களின் மனங்களில் தமிழ் உணர்வினை வளர்க்கும் மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியைப் பாராட்டும் விதமாக தலைமையாசிரியர் ஷேக் நபி அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். உடன் வடக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் தளபதி உட்பட மற்றும் பலர் உடனிருந்தனர்.
இதனை போற்றும் வகையில் பள்ளி விழா அரங்கில் இன்று மாலை பாராட்டு விழா நடைபெற உள்ளது இதில் பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் சார்பில் செய்து உள்ளனர்.



