கமுதி. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் உள்ளது கீழவில்லனேந்தல் கிராமம் இந்தஊரை சேர்ந்த குமரவேல் என்பவர் வீடுகட்டிவருகின்றார் பிரேஸ்மட்ட பணிக்காக சவடுமண் தேவைப்பட்டது சவடுமண்அள்ள கிராமநிர்வாக அதிகாரி சித்ராதேவியை அணுகினார் இதற்கு அனுமதிவழங்க சித்ராதேவி 10000 கேட்டதாக தெரிகின்றது இதில் முதலில் 5000வேண்டும் என கேட்டாராம் லஞ்சம் தர விரும்பாத குமரவேல் இதுகுறித்து ராமநாதபுரம் லஞ்சஒழிப்பு போலீஸ்துணை சூப்பிரண்ட் ராமச்சந்திரனிடம் புகார் தெரிவித்தார் பின்னர் லஞ்சஒழிப்புதுறை வழங்கிய ராமாயணம் தடவிய 5000ஆயிரத்தை எடுத்துக்கொண்டு கமுதி தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றார் அங்கு கிராமநிர்வாக அலுவலர் சித்ராதேவியிடம் லஞ்சபணத்தை யாரிடம் கொடுக்க வேண்டும் என செல்போனில் கேட்க அதற்கு அவர் கிராம உதவியாளர் வேல்முருகனிடம் பணத்தை கொடுக்குமாறு கூறியதாக தெரிகின்றது இதனைதெடர்ந்து 5000ஆயிரத்தை வேல்முருகனிடம் கொடுத்தபோது அங்கு மறைவாக நின்றிருந்த லஞ்சஒழிப்பு போலீசார் அவரை பிடித்தனர் இது தொடர்பாக கிராமநிர்வாக அலுவலர் சித்ராதேவி உதவியாளர் வேல்முருகனையும் கைது செய்து லஞ்சஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள் மேலும் இந்த வழக்கு தொடர்பாக தாசில்தார் சேதுராமன் மண்டலதுணை தாசில்தார் வெங்கடேஷ்வரன் ஆகியோரிடம் லஞ்சஒழிப்பு போலீசார் கிடிக்கிபிடி விசாரணை நடத்தி வருகின்றனர் பொதுமக்களில் சிலர் தெரிவித்ததாவது கமுதி தாலுகா அலுவலகத்தில் எந்த சர்டிபிகேட் வாங்குவதனாலும் லஞ்சம் தான் பட்டா மாறுதல் பட்டா அளவை எல்லாமே லஞ்சம்தான் லஞ்சகொடுத்தாதான் காரியமே நடக்குது இல்லையேல் இல்லை ஆகவே மாவட்டநிர்வாகம் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்



