மயிலாடுதுறை கூறைநாடு கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் எட்டு நாட்கள் நடைபெற்றது. தூய்மை பணி யோகா விழிப்புணர்வு, பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு, வழக்கறிஞர் சட்டக் கல்வி விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஈடுபட்ட என்.எஸ்.எஸ் மாணவர்கள், நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக போதைப்பொருள் தடுப்பு சார்ந்த விழிப்புணர்வு பேரணியை உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ், தலைமையில் நடத்தினர். மயிலாடுதுறை மாப்படுகை கிராமத்தில் மாணவர்கள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படி பொது மக்களிடையே போதை பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதைப்பொருள் பழக்கத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலு தொடக்கி வைத்தார். இப்பேரணியில் மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வேலு குபேந்திரன், தேசிய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் ராமலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி ஜெயக்குமார், ஒன்றிய குழு உறுப்பினர் சிவகுமார், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் இளஞ்செழியன், திட்டு ஒருங்கிணைப்பாளர் சிவகுமாரி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



