ஊட்டி. பிப்.15 நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கோத்தகிரி வருவாய் துறை மற்றும் காவல்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர் பேரணியை கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் தாசில்தார் ராஜலட்சுமி ஆகியோர் தொடங்கிவைத்தனர் மேலும் அவர்கள் பேசுகையில் போதை பொருட்களை பயன்படுத்துவதால் நினைவுத்திறன் பாதிக்கப்படும் பணம் விரயமாவதுடன் உடல் நலமும் கெடும் போதை பொருட்களின் பயன்பாடுதான் குற்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது எனவே மாணவர்கள் இளைமை பருவத்தை நல்வழியில் பயன்படுத்த வேண்டும் என்றனர் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி பஸ் நிலையம் மார்கெட் விடல் காமராஜர் சதுக்கம் காந்திமை தரைம் வழியாக சென்று தாசில்தார் அலுவலகத்தில் நிறைவடைந்தது பேரணியில் சென்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாதைகளை கைகளில் ஏந்தியவாறும்போத பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு கோஷங்களை எலும்பியவாறு சென்றனர்



