தஞ்சாவூர், ஜூன் 15 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் ஏற்றனர்.
முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி இந்தியா குடிமகன் /குடிமகளாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், அவர்களை உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் உறுதி கூறுகின்றேன்.
பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்கள் வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதினை தடுத்துட பாடுபடுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன் என மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் உறுதி மொழியை ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், உதவி கலெக்டர் பயிற்சி சுபாஷ் கார்த்திக், மாவட்ட சமூக அலுவலர் லதா மற்றும்அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



