திருப்பூர், ஜூலை 29: திருப்பூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக் கும் வகையில் கலெக்டர் கிறிஸ்துராஜின் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப் புத்துறை நியமன அதிகாரி
Dr. விஜயலலிதாம்பிகை தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இந்நி லையில் கடந்த 3 நாட்களில் மாவட்டம் முழுவ தும் பள்ளி அருகில் உள்ள பெட்டி கடைகள் மற்றும் கல்லூரிகள் அருகில் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் டாஸ்மாக் பார்களை
சுற்றியுள்ள பெட்டிக்கடைக ளில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதில் புகையிலை
பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட 22 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
புகையிலை பொருட்கள் முதல் முறை விற்பனை செய்தால் ரூ.25.000 அபதாரமும் 2வது முறை விற்பனை செய்த குற்றத்திற்கு ரூ.50.000 அபதாரமும்,3வது முறை விற்பனை செய்த குற்றத்திற்கு
ரூ.1 லட்சம் அபராதமும் 90 நாட்களுக்கு பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என
உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்கப்படும் என
அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக 94440 42322 என்ற எண்ணில் தொடர் புகொள்ளலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.
அவிநாசி
நகரில் தடை செய் யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அழகு சாதன பொருள்கள் விற்பனைக் கடை உரிமையாளரான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநந்தர் மகன் சுப்பையா (46) என்பவர் கடந்த இருநாள் முன் அவிநாசி போலீசாரால் கைது செய் யப்பட்டார். இந்நிலையில்,
சுப்பையா தொடர்ந்து 3வது முறையாக புகை யிலை பொருட்கள் விற்பனை செய்ததையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அப ராதம் விதித்து, கடைக்கு சீல் வைத்தனர்.
மேலும், அவிநாசி கமிட்டியர் காலனியில் பெட்டிக் கடை வைத்து நடத்தி வருபவர் மணி (55). இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் விற் பனை செய்ததையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேற்படி அபதார தொகையினை தமிழக அரசு கருவூலத்தில் மின்னணு பண பரிவர்த்தனையை (e challan) வாயிலாக மட்டுமே செலுத்த முடியும்.
என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தெரிவித்தார்.