தருமபுரி, அக்டோபர் 02 –
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி மருத்துவ கல்லூரியில் இருந்து நான்கு ரோடு வரை சென்று முடிவடைந்தது. இந்த பேரணியில் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரன், உள்ளிருப்பு மருத்துவர் நாகேந்திரன், மருத்துவர் ரமேஷ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



