தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கூட்டரங்கில் மீன்வளத் துறையின் சார்பில் உலக மீன்வள தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் கி. சாந்தி அவர்கள் தலைமையில் கொண்டாடப்பட்டு மீனவர்களுக்கு ரூ 3 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நல திட்ட உதவிகள் வழங்கினார். உடன் தருமபுரி மண்டல மீன்வள துணை இயக்குனர் சுப்பிரமணியம், மீன்வள உதவி இயக்குனர் கோகுலரமணன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நித்ய லட்சுமி, மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



