பரமக்குடி, செப். 8 –
சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ. சிதம்பரனாரின் 154-ன் வது பிறந்தநாள் விழா பரமக்குடி அனைத்து வெள்ளாளர் மகா சபையின் சார்பில் கொண்டாடப்பட்டது.
காட்டுப்பரமக்குடி பகுதியில் உள்ள அவரது சிலைக்கு அனைத்து வெள்ளாளர் மகா சபையின் சார்பில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு சபையின் தலைவர் குரு. சுப்ரமணியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் ராமலிங்கம் வரவேற்றனர். அனைத்து வெள்ளாளர் மகா சபையின் நிறுவனர் டாக்டர் கார்த்திகேயன், உயர் மட்ட நிர்வாகி கோவிந்தராஜன் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இதில் அமைப்பு செயலாளர் இருளப்பன், உயர்மட்ட குழு நிர்வாகி முனியாண்டி, வின்சென்ட் ஜெயக்குமார், ராதாகிருஷ்ணன், வள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, பரமக்குடி வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம் உள்ளிட்ட ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் முனியசாமி தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ, சதன் பிரபாகர், நகர் செயலாளர் வின்சென்ட் ராஜா உள்ளிட்ட அதிமுக கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிர்வாகிகளும், ஓ.பி.எஸ் அணியின் சார்பில் தர்மர் எம்.பி. தலைமையில் கட்சி நிர்வாகிகளும், காங்கிரஸ் கட்சியின் சார்பில் சோவா தள செயலாளர் அப்துல் அஜீஸ், மாநில கைத்தறி பிரிவு கோதண்டராமன், ஹாரிஸ் உள்பட நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாஜக சார்பாக மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி தலைமையில் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



