தூத்துக்குடி, அக்டோபர் 18 –
விளாத்திகுளம் தாலுகா அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் சேர்மகனி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம், தமிழ்நாடு ஆசிரியர் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரத் தலைவர் இப்ராஹிம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஜீவானந்தம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட இணை செயலாளர் முருகேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் மூர்த்தி, ராஜபிரியன், ஆனந்தராஜ், மலையாண்டி, ரவீந்திர ராஜன், பரணிதரன், தேன்மொழி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில ஒருங்கிணைப்பாளர் மயில் ஆர்ப்பாட்ட கோரிக்கைகளை வாசித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார பொருளாளர் சந்தனமாரி நன்றி கூறினார்.



