விளாத்திகுளம், ஜூலை 07 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மந்திக்குளம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் 100 நாட்கள் வேலை திட்டத்தில் மந்திக்குளம், ஓ.லட்சுமிநாராயணபுரம், லெக்கம்பட்டி, இலந்தைக்குளம், மீனாட்சிபுரம், கோட்டநத்தம் ஆகிய 6 கிராமங்களைச் சேர்ந்த 650க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 2 கூட்டமைப்பாக பிரிக்கப்பட்டு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து வேலை அட்டைதாரர்களுக்கும் 100 நாட்கள் பணி வழங்காமல் 50க்கும் குறைவான நாட்களே பணி வழங்கும் நிலை இருந்து வருகிறது.
இதனை முறைப்படுத்தி அனைத்து வேலை அட்டை காரர்களுக்கும் 100 நாட்கள் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டனர்.



