நாகர்கோவில், ஏப். 14 –
டாக்டர் அம்பேத்கர் 134-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவுன தலைவர் பி.டி. செல்வகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் அடுத்த லெட்சுமிபுரத்தில் அம்பேத்கர் 134வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் அப்பகுதி அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி. செல்வகுமார் அம்பேத்கர் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அப்பகுதி இளைஞர்களிடம் கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்தை ஆதரித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.



