தக்கலை, ஜூன் 24 –
திருநெல்வேலி மாவட்டம் கருங்குளம் பிடிகாலனியை சேர்ந்த ஐயாத்துரை மகன் ரசூல் என்ற முத்தையா (23). இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு குலசேகரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட செருப்பாலூர் முத்தாரம்மன் திருக்கோவிலின் தலைவரிடம் ஆயுதத்தை காட்டி பணம் பறித்த வழக்கில் இவரும் இவரது சகோதரர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவரது சகோதரர் இளஞ்சிறார் என்பதால் இளஞ்சிறார் நீதிமன்றத்தில் அவரது வழக்கு நடைபெற்று வருகிறது.
தற்போது 23 வயதாகும் ரசூல் என்ற முத்தையா மீது 2015 ஆம் ஆண்டு முதல் சுமார் 24 க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. அனைத்து வழக்குகளும் நிலுவையில் உள்ள நிலையில் முதன் முதலாக தற்போது குலசேகரம் காவல் நிலையத்தில் பதியப்பட்ட குற்ற வழக்கில் முதியவரை மிரட்டி ரூ.550 பணம் பறித்த குற்றச்சாட்டில் இன்று பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி பரமசிவதாஸ் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
இவர் மீது பல காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதையும், இந்த குறுகிய காலத்தில் அதிக குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதை கருத்தில் கொண்டு இவரை வெளியில் விட்டால் சமூகத்திற்கு பெரிய கேடு என்பதை அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எடுத்துரைத்ததை கருத்தில் கொண்டு, நீதிமன்றம் இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 384 இன் கீழ் ம 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதுடன் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஜெகதேவ் ஆஜராகி வாதாடினார்.



