களியக்காவிளை, ஜூன் 9 –
கன்னியாகுமரி மாவட்டம் தமிழக – கேரள எல்லை பகுதியான களியக்காவிளை காவல்நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத செயல்பாடுகளை கண்டறிந்து தடுக்கும் வகையில் 50 கண்காணிப்பு கேமரா செயல்பாட்டினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், குமரி மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் அனைத்து கிராமங்களிலும் ஊர்க்காவலன் திட்டத்தினை செயல்படுத்தினார் .அதில் ஒரு பகுதியாக குமரி மாவட்டத்தின் அனைத்து காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராகள் பொருத்தும் திட்டத்தையும் கொண்டுவந்தார்.
குற்ற செயல் நடந்த பின் தடுப்பதை விட குற்ற செயல் நடக்காமல் தடுப்பதே இதன் நோக்கம் ஆகும். ஊர்க்காவல் படை திட்டத்தில் குமரி மாவட்டத்தில் இதுவரை 2850 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக களியக்காவிளை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 50 கலைப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் செயல்பாட்டை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் இரு மாநில எல்லைகளுக்கு இடையே நடைபெறும் குற்ற செயல்களை கண்டறிய காவல்துறைக்கு எளிதாக இருக்கும் என எஸ்பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



