வாசுதேவநல்லூர், நவ. 14 –
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருள்மிகு சிந்தாமணி நாத சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேர்தல் திருக்கோவிலில் வைத்து வாக்கெடுப்பு மூலம் தென்காசி மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் செந்தில்குமார் தலைமையில் புளியங்குடி இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் வெற்றி வேந்தன் மேற்பார்வையில் தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக முத்து மாடன், சண்முகையா, பிள்ளையார், வேலம்மாள், சரவணன் ஆகியவர்களை உறுப்பினர்களாக தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அறிவிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் முன்னாள் பேரூர் கழக செயலாளர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் 14வது கவுன்சிலர் சரவணன் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்றார்.
இதில் மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், ஊராட்சி ஒன்றிய சேர்மன், வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன் முத்தையா பாண்டியன், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அன்பு அரசு, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் மணிகண்டன், பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் 15வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் மாரிமுத்து, மாவட்ட விவசாய தொழிலாளர்கள் துணை அமைப்பாளர் முனிஸ்வரன், பெரியசாமி, சுருளி வேல், புல்லட் பரமசிவன், சுப்பிரமணி, சுமங்கலி பட்டு மஹால் நிறுவனர் சமுத்திரவேல், தவமணி, சுமங்கலி சங்கர், நகைக்கடை சாமிதுரை, மீனாட்சி நகை மாளிகை நிறுவனர் மாரியப்பன், பொன்னையா பலசரக்கு மாளிகை நிறுவனர் பொன்னையா, ஒன்றிய பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தேவிபட்டினம் தங்க ரத்தினராஜ், பெரியாண்டவர் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.



