கிருஷ்ணகிரி, நவ. 03 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கோவிந்தாபுரம், கெடகாரனூர் கிராமத்தினைச் சேர்ந்த சென்னம்மாளை சொத்தை கேட்டு மிரட்டி அடியாட்களை வைத்து தாக்கியதாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நடவடிக்கை எடுக்க கோரி பத்துக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தாவது: ஊத்தங்கரை அடுத்த கெடகாரனூர் கிராமத்தினைச் சேர்ந்த சென்னம்மாள் (வயது 70) க/பெ தங்கவேல் இவர்களது மகன் குகானந்தன் வயதானவர்கள் என்று பார்க்காமல் சொத்தினை ஏமாற்றி பாண்டுரங்கன், கோவிந்தராஜி ஆகியோருக்கு நிலத்தை விற்றுள்ளார்.
இது சம்மந்தமாக நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்து பதிவாகி உள்ள நிலையில், நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது சென்னம்மாளின் மகள் கோவிந்தம்மாள், மகன் நாராயணன், மருமகள் சுகன்யா ஆகியோர் நிலத்தில் இருந்தபோது பாண்டுரங்கன் மற்றும் கோவிந்தராஜி இருவரும் சேர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்டோரை வரவழைத்து தாக்கியதில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோம்.
மேலும் சம்பந்தப்பட்ட சிங்காரப்பேட்டை காவல் நிலையத்திற்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில் வயதையும் பார்க்காமல் தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பத்துக்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் நிலையில் இது போன்ற சம்பவம் சட்டத்தை மதிக்காமல் நடந்துள்ளது என பலரும் கூறி வருகின்றனர்.



