By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிக ஆசையால் ஏமாற்றப்பட்டஆட்டோ டிரைவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அதிக ஆசையால் ஏமாற்றப்பட்டஆட்டோ டிரைவர்
கனஂனியாகுமரிமாவட்டம்

அதிக ஆசையால் ஏமாற்றப்பட்டஆட்டோ டிரைவர்

Last updated: February 10, 2025 11:37 am
February 10, 2025
67 Views
Share
SHARE

கன்னியாகுமரி பிப் 10

 

சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை பாதி விலைக்கு வாங்கி தருவதாக கூறி ஆட்டோ டிரைவர் ஒருவரை அவரது நண்பர் ஏமாற்றிய  சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆரல்வாய்மொழி அருகே உள்ள குருக்கள் மடத்தை சேர்ந்த ஒருவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கு தக்கலையை சேர்ந்த டாரஸ் லாரி டிரைவர் ஒருவர் அண்மையில் அறிமுகம் ஆகியிருக்கிறார். இருவரும் நன்கு பேசி நாளடைவில் நண்பர்களாக மாறியிருக்கிறார்கள். அப்போது, தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும் குடும்பத்தின் வறுமை நிலை பற்றியும் ஆட்டோ டிரைவர் லாரி டிரைவரிடம் கூறியிருக்கிறார்.அப்போது அவரது நண்பரான லாரி டிரைவர், ‘எனக்கு சுங்கத் துறையில் தெரிந்த அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் பறிமுதல் செய்துள்ள கடத்தல் தங்கத்தை ஏலம் விட உள்ளனர். அந்த தங்கத்தை அதிகாரிகள் உதவியுடன் சந்தை விலையை விட பாதிக்கு பாதி வாங்கி தருகிறேன். உனக்கு தெரிந்த நண்பர்களிடம் இருந்து பணம் வாங்கி தந்தால், தங்கம் வாங்கி தருவதோடு உனக்கும் கமிஷன் தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.இதனை உண்மை என நம்பிய ஆட்டோ டிரைவர், தனது நண்பர்களிடம் இதைப்பற்றி சொல்லி அவர்களிடம் இருந்து 1.80 லட்சம் பணத்தை புரட்டியிருக்கிறார். பின்னர் லாரி டிரைவர் நண்பர் சொல்லியது போல, அவரிடம் பணத்தை கொடுத்துள்ளார். கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் வைத்து பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய லாரி டிரைவர், தங்கம் கன்னியாகுமரியில் ஒரு லாட்ஜில் உள்ளது.அதை வாங்கி வருகிறேன் என்று கூறிவிட்டு ஆட்டோ டிரைவரிடம் இருந்து பைக்கையும் வாங்கி சென்றுள்ளார். தங்கத்துடன் தனது லாரி டிரைவர் நண்பர் வருவார் என கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் காத்திருந்த ஆட்டோ டிரைவருக்கு நேரம் செல்ல செல்ல ஏமாற்றமே மிஞ்சியது. நீண்ட நேரம் ஆகியும் வராததால், ஆட்டோ டிரைவருக்கு சந்தேகம் வந்தது. உடனே அவரை செல்போனில் கூப்பிட்டுள்ளார்.

அப்போது, பைக்கை நிறுத்திய இடத்தை சொன்ன லாரி டிரைவர் அதனை எடுத்துக்கொள்ளும்படியும் கொஞ்ச நேரத்தில் தங்க நகையுடன் வருவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அப்போதும் அவர் சொல்லியபடி திரும்பவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் என வந்தது. அப்போதுதான் தன்னை லாரி டிரைவர் ஏமாற்றியதை உணர்ந்த ஆட்டோ டிரைவர், கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்தார்.

இந்த புகாரை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கோலாகலமாக நடைபெற்ற பட்டம் சூட்டு விழா
அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பாலமேடு வட்டம்
முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பிறந்தநாள் விழா
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி; மக்கள் குறைதீர்க்கும் முகாமில் பரபரப்பு
புறம்போக்கு நிலத்தில் வண்டிப்பாதை அமைத்துதர கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

காவலர்களுக்கு சைபர் கிரைம் தொழில்நுட்ப பயிற்சி

April 16, 2025
114 Views
மார்த்தாண்டம் குருசடியில் இறந்து கிடந்த முதியவர்
தஞ்சாவூரில் இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஓபிஎஸ் – இபிஎஸ் ஒன்றிணைத்து வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையால் பரபரப்பு
தேரூர் பேரூராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account