ஈரோடு, மே 5 –
ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 8 சட்ட சபை தொகுதிகள் உள்ளன. இதில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, கோபி, மொடக்குறிச்சி, பவானி சாகர் ஆகிய 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று உள்ளது.
கோபிசெட்டிபாளையம் தவெக வேட்பாளர் செங்கோட்டையன் 16 ஆயிரத்து 620 ஓட்டு வித்தியாசத்திலும், ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் விஜய் பாலாஜி 23966 ஓட்டு வித்தியாசத்திலும், ஈரோடு மேற்கு தொகுதி வேட்பாளர் ஆனந்த் மோகன் 21 ஆயிரத்து 250 ஓட்டு வித்தியாசத்திலும், பவானி சாகர் வேட்பாளர் தமிழ் செல்வி 5 ஆயிரத்து 500 ஓட்டு வித்தியாசத்திலும், மொடக்குறிச்சி வேட்பாளர் சண்முகம் 2430 வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றதால் அக்கட்சியினர் உற்சாகம் அடைந்தனர். இதனால் ஆண்கள் மட்டும் அல்லாமல் பெண்கள், சிறுவர், சிறுமிகளும் மாவட்டம் முழுவதும் வயது வித்தியாசம் இல்லாமல் விசில் ஊதியபடி வாண வேடிக்கைகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.


