முதுகுளத்தூர், மே 30 –
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள மெயின் ரோட்டில் ஜல்ஜீவன் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கடந்த ஒரு மாத காலமாக தினம்தோறும் பல லட்சம் குடிநீர் வீணாக அருகில் உள்ள வாய்க்காலில் பாய்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஜல் ஜீவன் திட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இந்த கோடை காலத்தில் குடிநீர் கிடைக்காமல் பல கிராமங்களில் பல கிலோமீட்டர் நடந்து தண்ணீர் தேடி வரும் நிலையில் நாள்தோறும் பல லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வீணாவது வருத்தமாகவும் வேதனையாகவும் உள்ளது. எனவே சம்மந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து உடைப்பை அடைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



