மார்த்தாண்டம், மார்ச் 2 –
மார்த்தாண்டம் அருகே பரக் குன்று பகுதியை சேர்ந்தவர் ஜாக்குலின் (48). இவருக்கும் மருதன்கோடு பகுதியை சேர்ந்த பிரபின் குமார் (28) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று ஜாக்குலின் தனது மகள் மற்றும் சகோதரியுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மருதங்கோடு பகுதியில் வைத்து பின்னால் வைக்கில் வந்த பிரவீன்குமார் மற்றும் கிளீட்டஸ், கண்டால் தெரியும் நபர் சேர்ந்து காரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.
தொடர்ந்து ஜாக்குலின் மகள் கழுத்தை பிடித்து நெரித்து, அதை தடுத்த ஜாக்குலினை தாக்கியதுடன், கம்பியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இது குறித்த ஜாக்குலின் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் ஜாக்குலின் மற்றும் மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த பிரவீன்குமார் உட்பட மூன்று வழக்கு பதிவு செய்தனர். இதில் கிளிட்டஸ் என்பவர் மீது குளச்சல், கொல்லங்கோடு, மார்த்தாண்டம் காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் உள்ளதும், அவர் பிரபல ரவுடி என்பதும் தெரிய வந்துள்ளது.


