மார்த்தாண்டம், பிப். 16 –
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஏட்டு ஒருவர் சமீபத்தில் அதிரடியாக களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அவர் சோதனை சாவடிகளில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஏட்டு மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வழக்கு சம்பந்தமாக வந்த போது 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி உள்ளது.
இதையடுத்து இருவரும் தனிமையில் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அத்துடன் மணிக்கணக்கில் செல்போனிலும் பேசி வந்துள்ளனர். மேலும் வீடியோ கால் செய்து அதில் கிளுகிளுப்பாக பேசியதாக தெரிகிறது. இந்த நிலையில் இளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு ஏட்டுடன் ஆன தொடர்பு குறித்து தெரிய வந்தது. இது குறித்து மாவட்ட எஸ்பி ஸ்டாலினுக்கும் புகார்கள் சென்றன. இதையடுத்து எஸ்பி உத்தரவின் பேரில் விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து சர்ச்சைக்குள்ளான போலீஸ் ஏட்டை நாகர்கோவில் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏட்டு மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலிஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு சம்பந்தமாக போலீஸ் நிலையத்துக்கு வந்த பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு தகாத உறவு ஈடுபட்டு ஏட்டு சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


